மிசோரம் மாநிலம் சைரங் என்ற இடத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 17 உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்தபோது 40-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்ததால் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் “மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. உதவித் தொகையாக ரூ. இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து 2 லட்சம் வழங்கப்படும். ரூ. காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும்” என பதிவிட்டிருந்தார்.