ஒவ்வொரு வருடமும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றோம். அந்த வகையில் இந்த வருடமும் நவம்பர் 14ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் இன்று குழந்தைகள் தின போட்டிகள் நடைபெறும்.
மேலும், அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அதில், “திறந்த மனத்தோடு உலகை அணுகுவதும்,கற்கும் ஆர்வமும் குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், அவர்கள் அச்சமின்றி உலவிட தேவையான பாதுகாப்பை உறுதிசெய்வோம். அவர்களது தேவைகளை நிறைவுசெய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.