fbpx

#JustIn : “அச்சமின்றி உலவ..” குழந்தைகள் தின வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்.!

ஒவ்வொரு வருடமும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றோம். அந்த வகையில் இந்த வருடமும் நவம்பர் 14ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதற்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் இன்று குழந்தைகள் தின போட்டிகள் நடைபெறும்.

மேலும், அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அதில், “திறந்த மனத்தோடு உலகை அணுகுவதும்,கற்கும் ஆர்வமும் குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், அவர்கள் அச்சமின்றி உலவிட தேவையான பாதுகாப்பை உறுதிசெய்வோம். அவர்களது தேவைகளை நிறைவுசெய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

10 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம்.மெஷினையே ஆட்டையை போட்ட கும்பல்.!

Mon Nov 14 , 2022
ராஜஸ்தானில் 10 லட்சம் இருந்த ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தில் தபோக் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்ப கும்பல் ஒன்று அங்கு வந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியை மிரட்டி சிறை பிடித்தனர். அப்போது பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து அதன் பின் மொத்தமாக […]

You May Like