fbpx

மாதந்தோறும் உதவித்தொகை, தங்கிப் படிக்க விடுதி..!! வேலைவாய்ப்பு உறுதி..!! நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் நாளைக்குள் (ஆகஸ்ட் 31) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர், இயந்திர பட வரையாளர் மற்றும் லிப்ட் மெக்கானிக் ஆகிய தொழிற் பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிகள் முடிவடைந்த உடன் நேர்காணல் நடத்திய தொழில் நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.750 மாதம் உதவித்தொகை, பாட புத்தகங்கள், வரைபடக் கருவி, 2 ஜோடி சீருடைகள், பேருந்து பயண அட்டை மற்றும் மூடு காலனி ஆகியவை தமிழக அரசால் வழங்கப்படும் எனவும் தங்கிப் படிக்க விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Chella

Next Post

”டேய் மச்சான் புடிடா அவன”..!! பதறிய பேருந்து நிலையம்..!! விரட்டி விரட்டி துரத்திய மாணவர்கள்..!! நடந்தது என்ன..?

Wed Aug 30 , 2023
மதுரை மாநகர் ரயில்வே நிலையம் அருகே பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில், இன்று காலை தாராப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்பையா ஆகிய இருவரும் பெரியார் பேருந்து நிலையத்தில் வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றனர். அப்போது, அவர்கள் கையில் வைத்திருந்த செல்போன்களை அந்த பகுதியில் நடந்து சென்ற 4 வடமாநில இளைஞர்கள் […]

You May Like