fbpx

அங்கன்வாடி மையங்களில் 10,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ஏராளமான அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. அதில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளில் சேர D.Ted படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப கோரி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம், கையெழுத்து, தகுதி சான்றிதழ், விண்ணப்பக் கடிதம், அனுபவச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள் ஆகியவை தேவைப்படும். அதேசமயம் இந்த பணியிடங்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் இறுதி தகுதி பட்டியல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படும். இந்த பணியில் சேர குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வயது இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் https://icds.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதே சமயம் இந்த பணியில் சேர்ந்தால் மாதம் 6,500 முதல் பணிக்கு தகுந்தது போல சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

நெருங்கும் தேதி..!! என்ன செய்யலாம்..? முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்..!!

Tue May 2 , 2023
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி திமுக ஆட்சி அமைந்தது. முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி வருகிற 7ஆம் தேதி இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டை தொடங்குகிறது. இத்தகைய சூழலில், நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுபோக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக […]

You May Like