fbpx

4 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது!!! மத்திய அரசு தகவல்

நாடு முழுவதுமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் 498 வழக்குகளும், தொழிலாளர்கள் தொடர்பான 1667 வழக்குகளும், 487 தேர்தல் வழக்குகளும், 2870 பொதுநல வழக்குகளும், 1295 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் 69,781 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 53,51,284 வழக்குகளும், மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் 4,28,26,777 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.65 சதவிகிதம் நிலுவை வழக்குகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, உயர்நீதிமன்றங்களில் 0.82 சதவிகிதமும், மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் 4.32 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Kathir

Next Post

மக்களே...! அரசு வழங்கும் சலுகைகள் பெற ஆதார் எண் அவசியமா....? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்...!

Sat Dec 17 , 2022
ஆதார் அட்டை இப்போது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் முதல் வருமான வரி, வரை அனைத்தும் தற்ப்போது ஆதார் உடன் இணைக்க அரசு கட்டாயமாகியுள்ளது. அரசாங்கமும் பிற நிறுவனங்களும் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு தேவைப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயமாகிவிட்டது. இந்த நிலையில் மக்கள் அரசின் சலுகைகளை பெற ஆதார் அவசியம் எனவும் ஆதார் ஒதுக்கப்படும் […]

You May Like