சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன. அப்போது பனிமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
சுமார் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின. உடனடியாக தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்ககளில் வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும் வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீயணைப்பு வீரர்கள் மக்களை மீட்கும் வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.