fbpx

அம்மா!… என்னை கொல்லப்போகிறார்கள்!… காப்பாற்றுங்கள்!… உ.பி. இளைஞரின் கடைசி திக் திக் நிமிடங்கள்!

உத்திரபிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவரை இரண்டு துண்டாக வெட்டி தண்டவாளத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ரயில் பாதையில் மர்மமான முறையில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இந்த சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் இறந்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த துட்டன் என்ற இளைஞர் என்று போலீசார் அடையாளம் கண்டனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், அஸ்ஸாமைச் சேர்ந்த துட்டன் என்ற இளைஞர் லும்டிங்கில் உள்ள ஹதிபங்கா காலனியில் வசிக்கிறார்.

இவர் ரயிலில் உள்ள குளிர்சாதன அறைகளில் படுக்கை வசதிகளை செய்து கொடுக்கும் பணியாளராக பணிபுரிந்தார். மார்ச் 1 அன்று, லும்டிங்கில் இருந்து திப்ருகருக்கு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மார்ச் 2ம் தேதி திப்ருகார்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் படுக்கை வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாக தெரிவித்தனர்.

துட்டன் கொல்லப்படுவதற்கு முன் தனது தாயைத் தொடர்புகொண்டு, “அம்மா, தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். என்னைக் கொல்லப் போகிறார்கள். நான் உன்னை மீண்டும் பார்க்க முடியாது. தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார். இதையடுத்து குற்றவாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யவும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Kokila

Next Post

மார்ச் 31-க்குள் இந்த பணிகளை முடித்துவிடுங்கள்.. இல்லை எனில் அபராதம் செலுத்த நேரிடும்..

Wed Mar 8 , 2023
வரும் மார்ச் 31-ம் தேதியுடன் 2022-23 நிதியாண்டு முடிவைடகிறது… எனவே மார்ச் மாதம் பல நிதி தொடர்பான பணிகளுக்கான கால அவகாசமும் முடிவடைய உள்ளது.. இந்த காலக்கெடுவுக்குள் அந்த பணிகளை முடிக்கவில்லை எனில், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.. அல்லது பிற விளைவுகளை சந்திக்க வேண்டும். இந்த மார்ச் 31, 2023க்குள் முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.. பான்-ஆதார் இணைப்பு: மார்ச் 31, […]

You May Like