fbpx

தற்காலிக ஆசிரியர் பணி.. இவர்களை முதலில் பரிசீலிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் அறிவுரை..

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ கடந்த 2013-ம் ஆண்டு, நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை.. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை பணி கிடைக்கவில்லை.. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப தமிழக அரசு கடந்த 23-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது..

ஆனால் தற்காலிக பணியிடங்களை நிரப்ப முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை.. அந்தந்த மாவட்ட கல்வி அலுவர்கள் தங்களுக்கு தேவையானவர்களை பணியில் நியமிக்க வாய்ப்புள்ளது.. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.. இதனால் மாணவர்களும் பாதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.. எனவே தமிழக அரசு கடந்த 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடையும் விதிக்க வேண்டும்..” என்று கூறியிருந்தார்..

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உயர்நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியனமத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு முறையீடு செய்தது. ஆனால் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது..

இந்த நிலையில் இன்று வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது அரசு தரப்பில், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில், 28984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..

Maha

Next Post

திடீர் ட்விஸ்ட்.. புகாரை திரும்ப பெறுவதாக கூறிய நடிகை.. முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ரத்து...

Sat Jul 9 , 2022
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கடந்த காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.. மேலும் கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார். மணிகண்டன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது […]

You May Like