மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை வீழ்ந்து விட்ட நிலையில் தாய் தனியாக பிரிந்து சென்றதால் அந்த சிறுமி தன்னுடைய பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார் இந்த நிலையில் பள்ளியின் கோடை விடுமுறை காலங்களின் போது மகளைத் தேடி வந்த தாய், விடுமுறை முடியும் வரை தன்னுடன் இருக்குமாறு தெரிவித்து மகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அந்த சிறுமியின் தாய் தங்கி இருந்த வீட்டில் அந்த சிறுமியின் பெரியம்மா, சித்தி உள்ளிட்டோரும் இருந்தனர்.. நாள்தோறும் அந்த சிறுமிக்கு இரவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து அந்த சிறுமி தூங்கிய பிறகு அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். நாள்தோறும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி, ஒருவழியாக தாயிடமிருந்து தப்பி தன்னுடைய பாட்டியின் வீட்டிற்கு வந்தார். அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகளை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார் அந்த சிறுமி.
இதைக்கேட்டு அதிர்ந்துப்பொன அந்த சிறுமியின் பாட்டி தல்லாக்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியின் தாய், சித்தி, பெரியம்மா வந்துட்டோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறிப்பு இதுவரையில் 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.