வாகன போக்குவரத்தின்போது, குறிப்பிட்ட இந்த காரணங்களுக்காக பிடிப்பட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டில், 2016 மோட்டார் வாகனச் சட்டத்தை நிறைவேற்றியது, அதில் பல புதிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மேலும் இந்த திருத்தங்கள் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்துவதற்கு பல புதிய வழிகள் உள்ளன என்பதைக் குறிக்கிறது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 206வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, பின்வரும் குற்றங்களுக்காக ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் உரிமையும் போக்குவரத்து போலீசாருக்கு உண்டு. எனவே சாலையில் செல்லும் போது அதிக வேகத்தை தவிர்க்கவும்.
சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதை காவல்துறை கண்டுபிடித்தால், உங்களின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யும் சாத்தியக்கூறுடன் அதிக அபராதமும் விதிக்கப்படலாம். ஆபத்தான வாகனம் ஓட்டுவதில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் விதிகளுக்கு கீழ்ப்படியாமல் இருப்பது ஆகியவை அடங்கும். நீங்கள் வாகனம் ஓட்டுவது சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அது ஆபத்தான வாகனம் ஓட்டுவதாகக் கருதப்படும். மோட்டார் சைக்கிளில் ஸ்டண்ட் செய்வது கூட பொது சாலைகளில் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்திருப்பதும் குற்றமாகும். எனவே சாலையில் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும்போது, உங்கள் மோட்டார் சைக்கிளில் ஓட்டுபவரையும் சேர்த்து அதிகபட்சம் 2 பேர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பொதுச் சாலைகளில் பந்தயத்தில் ஈடுபட்டால், கடும் அபராதம் விதிக்கப்படும். அதே போல் பந்தயத்தில் சிக்கினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் அபாயம் அதிகரிக்கிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும், போதையில் வாகனம் ஓட்டும்போது பிடிபட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதத்தை சந்திக்க வேண்டி வரும். அதே நேரத்தில் போக்குவரத்து காவல்துறை உங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்யலாம். மீண்டும் இவ்வாறு செய்து பிடிபட்டால், ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் இல்லாமல் பிடிபட்டால், ரூ. 1000 வரையிலான அபராதத்துடன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. சிவப்பு சிக்னலைக் கடப்பதால் உங்கள் உரிமம் ரத்துசெய்யப்படலாம், எனவே சிவப்பு விளக்கைக் கடப்பதைத் தவிர்க்கவும்.