பங்களாதேஷில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் , நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) பதவியேற்க உள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் அறிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெனரல் வேக்கர், பதவியேற்பு விழா உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கு நடைபெறும் என்று கூறினார். இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு 15 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கலாம் என்றும், இறுதி விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார். நாடு முழுவதும் நிலைமை கணிசமாக மேம்பட்டு வருவதாகவும், இது தேசத்தின் சாதகமான அறிகுறி என்றும் அவர் குறிப்பிட்டார்.
Read more ; காயம் காரணமாக வினேஷ் போகட் வெள்ளி வென்றிருக்க முடியுமா? ஒலிம்பிக் விதிகள் சொல்வது என்ன?