உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் வயது மூப்பின் காரணமாகவும் உடல் நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ஐசியுவுக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. வழக்கமான பரிசோதனையின்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவரது மகனும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் டெல்லி வந்தார். முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரின் மனைவி சாதனா குப்தா இந்த ஆண்டு ஜூலை மாதம் காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தா. அவரது முதல் மனைவி மால்தி தேவி 2003 இல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.