fbpx

சிவகார்த்திகேயானால் இமான் குடும்பம் பிரிந்தது..! அன்று மோகன் செய்ததையே இன்று சிவகார்த்திகேயன் செய்துள்ளார்..! வலைப்பேச்சு அனந்தன்…

இசைமைப்பாளர் இமானின் சமீபத்திய பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என்று கூறினார். இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் இமான் சிவகார்த்திகேயன் விவகாரத்தில் நடந்தது என்ன என்று வலைப்பேச்சு அனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் டி இமான். இவர் சிறந்த பாடகராகவும் அசத்தி வருகிறார். பல நடிகர்களுக்கு இசையமைத்திருந்தாலும், டி இமான்-நடிகர் சிவகார்த்திகேயன் காம்போ எப்போதுமே நன்றாக இருந்துள்ளது.

மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட சிவகார்த்திகேயனின் 5 படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். ஆனால், வெகு நாளாக இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருக்கின்றனர். அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இமானிடம், ஏன் இப்போது சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.

இது குறித்து பதிலளித்த இமான், “இனி சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது இந்த ஜென்மத்தில் கஷ்டம். தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் அவருடன் இணைந்து பயணிக்க முடியாது. ஏனென்றால், அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அதை நான் வெளியில் சொல்ல முடியாது. எனக்கு துரோகம் செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது? என்று நான் சிவகார்த்திகேயனிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை நான் வெளியில் சொல்ல முடியாது. சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் குழந்தைகளின் எதிர்காலம் தான்.

அடுத்த ஜென்மத்தில் அவரும் நடிகராக இருந்து, நானும் இசையமைப்பாளராக இருந்தால் ஒரு வேலை இணைந்து பணியாற்றலாம். இனிமேல் சிவகார்த்திகேயனின் படங்கள் நான் நிச்சயம் பண்ணமாட்டேன். இத்தனை வருடங்களாக அவருடன் நான் ஒரே குடும்பமாக இருந்து பேசி பழகியதால், அவர் துரோகம் செய்தது எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாத வலியை கொடுத்தது” என்று இமான் பேசினார்.

இந்த பேச்சு தீயாய் பரவியது. இதனைத்தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா அவரே இந்த விஷயத்தில் தலையிட்டு, இமானுக்கு பட வாய்ப்பு இல்லாததால் சிவகார்த்திகேயன் மீது இப்படி பழி போடுகிறார். சிவகார்த்திகேயன் உண்மையில் நல்ல மனிதர், எங்களுக்கு விவாகரத்து கிடைக்க கூடாது என்று போராடினார் என்று முன்னாள் கணவரான இமானை தாக்கியும் சிவகார்த்திகேயனை உயர்த்தியும் கூறினார். இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

சிவகார்த்திகேயன் இமானுக்கு துரோகம் செய்ததால் தான் அவர்கள் இருவரின் உறவு முறிந்து இமானின் குடும்பம் பிரிந்துள்ளது என்று 7 மாதத்திற்கு முன்னரே வலைப்பேச்சு என்ற சமூக வலைதள பக்கத்தில் சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்திருந்தார். தற்போது இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் இமான் கூறியதை அடுத்து பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இமானுக்கு போன் செய்த சிவகார்த்திகேயன் இமானின் அந்த வீடியோவை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார், மேலும் தனது அம்மா தங்கச்சிக்கு இந்த விவகாரம் குறித்து தெரிந்தால் என் மானமே போயிடும் காப்பாத்துங்க அண்ணா என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார், அதற்கு பதிலளித்த இமான் என் மனைவி என் பிள்ளைகள் பாதிக்கப்படுவதை நீ யோசிக்கவில்லை, தற்போது உனக்கு பிரச்சனை என்று வந்ததும் இப்படி பேசுகிறாய், மன்னிப்பு, என்னிடம் நீ கேட்க வேண்டாம் அந்த கடவுளிடம் கேள் என்று கூறியதாக வலைப்பேச்சு பக்கத்தில் சினிமா விமர்சகர் பிஸ்மி கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து வலைப்பேச்சு அனந்தன் கூறியுள்ளது, இமான் கூறியது பொய்யில்லை என்றும், அவர் சொன்ன வார்த்தை வலி மிகுந்தது. ரொம்ப காலமாக தம்பியாக எண்ணிய சிவகார்த்திகேயனை, வீட்டில் விட்டதற்கு அவர் இப்படி ஒரு துரோகம் இமானுக்கு செய்துள்ளது தவறு என்றும், சிவகார்த்திகேயனால் இமான் தன் மனைவியை பிரிந்து குழந்தைகளை பிரிந்து வேறொரு வாழக்கை வாழ்ந்து வருகிறார். இதற்கு காரணமே சிவகார்த்திகேயனின் தவறான செயல் தான் என்றும், அவரை நல்லவராக நினைத்த அனைவருக்கும், தற்போது அவரின் தீய குணம் தெரியவந்துள்ளது.

அவர் இமானுக்கு செய்தது தவறு தான் என்றும். முன்பொரு காலத்தில் மைக் பிடித்து நடித்து பிரபலமடைந்து, கமல் ரஜினியையே மிரளவிட்ட நடிகர் ஒருவர், ஒழுக்கம்கெட்டு தயாரிப்பாளர் வீட்டிலேயே கை வைத்தார், இதையறிந்த தயாரிப்பாளர் அவரை பழி வாங்க அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக ஒரு செய்தியை பரப்பிவிட்டார், இத்தனைக்கு அவருக்கு அப்படி ஒரு நோய் எல்லாம் கிடையாது, ஆனால் அதன் பிறகு அந்த நடிகரின் சினிமா வாழ்க்கையே முடிந்து விட்டது. அந்த நடிகர் செய்த அதே தவறை தான் சிவகார்த்திகேயன் தற்போது செய்துள்ளார். மேலும் இமானின் விடியோவை பொறுக்காத சிவகார்த்திகேயன் இந்த அசிங்கத்தை மறைக்க அவருடைய ஐடி-விங்கை தூண்டிவிட்டு அவரை நல்லவர் போல் காமித்துக்கொள்கிறார் என்று வலைப்பேச்சு அனந்தன் கூறியுள்ளார்.

Kathir

Next Post

CWC 2023: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து அணி..!

Tue Oct 17 , 2023
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது அப்காஹனிஸ்தான். அதே போல் இன்று நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது நெதர்லாந்து அணி. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணியுடனான மிகப்பெரும் வேற்றியை தொடர்ந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் […]

You May Like