fbpx

’என்னது 100 நாள் வேலை திட்டம் இனிமே கிடையாதா’..? ’பணமே இல்லையாம்’..!! கைவிரித்த மத்திய அரசு..?

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

இந்நிலையில், தற்போது நிதிப் பற்றாக்குறையால் 100 நாள் வேலை திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் எதிர்ப்புகள் எழுந்தன.

2022-23ஆம் நிதியாண்டில் ரூ.89,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24ஆம் நிதி ஆண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், 100 நாள் வேலை திட்டத்துக்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கமும் அளித்துள்ளது.

Chella

Next Post

அடிதூள்!… பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு!… வந்தது ஜாக்பாட் அறிவிப்பு!

Sat Oct 7 , 2023
பெண் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார். நாகரீகமும், தொழில் நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்தாலும் மூடநம்பிக்கைகள் இன்னும் புரையோடி தான் இருக்கின்றன. குறிப்பாக கிராமங்களில் இன்னும் பெண் குழந்தை பிறந்தாலே செலவு தான் என நினைத்து பெண்சிசுக் கொலைகள் தொடர்ந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் […]

You May Like