திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மடத்துக்குளத்தில் சோழமாதேவி என்கிற வாய்க்காலில் நேற்றைய தினத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
புகாரின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்த பெண்ணிற்கு 60 வயது இருக்கும் என்று தெரியப்படுகிறது.
இதனை தொடர்ந்து உடல் முழுவதும் அழுகிய நிலையில் முகம் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண கொள்ள முடியாத நிலையில் இருந்ததால், அதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் விசாரணையில் அந்தப் பெண் இறந்து சுமார் ஒரு வாரம் இருக்கலாம் என்று தெரியப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண் பற்றி விவரங்கள் சேகரித்து வருகின்றனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர்.