fbpx

# திருப்பூர் : அழுகிய நிலையில் கிடந்த மர்ம பெண் சடலம்..!

திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மடத்துக்குளத்தில் சோழமாதேவி என்கிற வாய்க்காலில் நேற்றைய தினத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

புகாரின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்த பெண்ணிற்கு 60 வயது இருக்கும் என்று தெரியப்படுகிறது.

இதனை தொடர்ந்து உடல் முழுவதும் அழுகிய நிலையில் முகம் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண கொள்ள முடியாத நிலையில் இருந்ததால், அதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் விசாரணையில் அந்தப் பெண் இறந்து சுமார் ஒரு வாரம் இருக்கலாம் என்று தெரியப்படுகிறது. 

இந்த நிலையில் அந்த பெண் பற்றி விவரங்கள் சேகரித்து வருகின்றனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

மீண்டும் புதுப்பொலிவுடன் ரிலீசாகிறது ரஜினியின் ’பாபா’ திரைப்படம்..!! குஷியில் ரசிகர்கள்..!!

Mon Nov 21 , 2022
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, […]
மீண்டும் புதுப்பொலிவுடன் ரிலீசாகிறது ரஜினியின் ’பாபா’ திரைப்படம்..!! குஷியில் ரசிகர்கள்..!!

You May Like