fbpx

வெங்காய விலை வீழ்ச்சி…! மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…! ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்படும்…!

குஜராத்தில் வெங்காய விலை வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் வெங்காயக் கொள்முதலைத் தொடங்க உள்ளது. மத்திய அரசின் இம்முடிவால் மாநிலத்தில் வெங்காயச் சந்தையில் ஸ்திரத்தன்மை நிலவும். குஜராத்தில் பாவ்நகர், கொண்டல், போர்பந்தர் ஆகிய இடங்களில் இன்று முதல் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய உள்ளது.

விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் இந்நடவடிக்கை அவர்களுக்கு உடனடி நிவாரணமாக இருக்கும். நல்ல விலைப் பெறும் வகையில், ஈரமில்லா, நல்ல தரமான வெங்காயத்தைக் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வருமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். கொள்முதல் செய்ததற்கானப் பணம் ஆன்லைன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தேவைக்கேற்ப மேலும் அதிகக் கொள்முதல் மையங்கள் திறக்கப்படும்.

Vignesh

Next Post

நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் உலா வந்த வாலிபர்..!! சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

Thu Mar 9 , 2023
நாகர்கோவில் வடசேரியில் உள்ள தெரு ஒன்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் 35 வயது வாலிபர் ஒருவர், காரில் இருந்து நிர்வாண கோலத்தில் இறங்கினார். அப்படியே நடுரோட்டில் அங்கும், இங்கும் அலைந்த அவர், பின்னர் காரில் ஏறி சென்றார். இந்த கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. நிர்வாண கோலத்தில் தான் காரையும் ஓட்டி வந்துள்ளார். தெருவுக்குள் காரை நிறுத்தி பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்காக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. […]

You May Like