தேசிய விருதுகள் பெற்ற மேக்-அப் ஆர்டிஸ்ட் விக்ரம் கெய்க்வாட் காலமானார்.
புகழ்பெற்ற ஒப்பனை கலைஞர் விக்ரம் கெய்க்வாட் இன்று (சனிக்கிழமை) மும்பையில் காலமானார். இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி படங்களில் அற்புதமான படைப்புகளுக்காக தேசிய விருது வென்றுள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி, சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
சர்தார், தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், பானிபட், உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், தங்கல், பிகே, மற்றும் பெல் பாட்டம் போன்ற சிறந்த பாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். மராத்தி சினிமாவில், பால்கந்தர்வா, காஷிநாத் கனேகர், லோக்மான்யா மற்றும் ஃபட்டேஷிகாஸ்ட் போன்ற வரலாற்று நாடகங்களை அவர் மேம்படுத்தினார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புகழ்பெற்ற மேடை நாடகமான ஜான்தா ராஜாவில் அவரது பணி கலாச்சார நினைவில் நிலைத்துள்ளது.
தனது தொழில் வாழ்க்கையில், கெய்க்வாட் 7 முறை சிறந்த ஒப்பனை கலைஞருக்கான தேசிய விருதைப் பெற்றார். முதல் முறையாக 2013 இல் ஒரு பெங்காலி படத்திற்காக இந்த விருதை வென்றார். பயோபிக் படங்களில் கபில்தேவ், இந்திராகாந்தி, பகத்சிங் கதாபாத்திரங்களுக்கு தத்ரூபமாக திரையில் உயிர் கொடுத்தவர். இந்நிலையில், இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.