fbpx

NEET PG: மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதிகளில் மாற்றம் செய்து அறிவிப்பு…! மீண்டும் எப்பொழுது…? முழு விவரம் உள்ளே…

நீட் முதன்நிலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21-ம் தேதி நடைபெற்றது. நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளுடன், முதுகலை நீட் 2022-ம் ஆண்டிற்கான கட்-ஆஃப்களும் வெளியிடப்பட்டன. அதன்படி, பொதுப்பிரிவினர், EWS பிரிவினருக்கு கட் – ஆப் 275 ஆகவும், OBC & பட்டியலினத்தவருக்கு கட் – ஆப் 245 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு கட் – ஆப் 260 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 1ம் தேதி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்பொழுது கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நீட் முதுநிலை கலந்தாய்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேசிய மருத்துவ ஆணையம். இந்த முதுநிலை மருத்துவ படிப்புகளில் கூடுதல் இடங்களை சேர்க்க வேண்டியதன் காரணமாக கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

#Alert: அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் எல்லாம் கவனமா இருங்க...! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்...!

Tue Aug 30 , 2022
தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். முக்கியமாக நீலகிரி, கோயம்புத்தூர், […]

You May Like