நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அகே இளைஞர் ஒருவர் ராணுவத்தில் சேர முடியாததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வீரவநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட மேலப்புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(19) . தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் பணியாற்ற திட்டமிட்டுள்ளார். இதனால் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விண்ணப்பித்தார். இதற்காக நடத்தப்பட்ட எழுத்து மற்றும் உடற்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் , மருத்துவ பரிசோதனையில் கண் பார்வை சோதனையின்போது குறைபாடு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர் நிராகரிக்கப்பட்டார். தான் ராணுவத்திற்கு தேர்வாகவில்லையே என்ற விரக்தியில் , இருந்துள்ளார் சதீஸ்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.