தமிழ்நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக கருவூலம் மற்றும் கணக்கு துறையின் தரவு தளத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய நிலையில் தான் அடையாள அட்டையில் தங்களுடைய புகைப்படத்துடன் அவர்களின் துணைவரின் புகைப்படத்தையும் ஒட்டி புதிதாக வழங்க உண்டான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், தற்சமயம் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.