fbpx

வந்தாச்சு Gpay, PhonePe-க்கு புதிய கட்டுப்பாடு..!! பயனர்கள் அதிர்ச்சி..!!

கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வரம்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற UPI வழி பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ரூபாய், 10 ரூபாய் என சில்லறை காசை எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறை இருந்து வந்தது. இதனால், பலசரக்கு கடை முதல், டீ கடை வரையில் கூகுள் பே பயன்படுத்துகின்றனர். 

வந்தாச்சு Gpay, PhonePe-க்கு புதிய கட்டுப்பாடு..!! பயனர்கள் அதிர்ச்சி..!!

இதனால், ஒவ்வொரு ஆண்டும் பணப்பரிவர்த்தனைக்கான கால அளவில் 30 சதவீதம் இடைவெளி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தாண்டும் கால இடைவெளி நிர்ணயித்து, அதற்கு ஏற்ப பரிவர்த்தனை எண்ணிக்கைகளுக்கு வரம்பிடப்பட உள்ளது. UPI செயலிகளை அடிக்கடி பயன்படுத்தும் போது, ஒரு கட்டத்திற்கு மேல் Transaction Failed என்பது போன்ற பிழைச்செய்திகள் வரலாம். PhonePe மற்றும் Google Pay போன்ற UPI இயங்கு தளங்கள் தற்போது சந்தையில் சுமார் 80% பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்துகின்றன. எந்தவொரு UPI செயலிகளையும் அன்லிமிடேட்டாக பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, NPCI 30 சதவீத அளவு வரம்பை வழங்குவதற்கான திட்டத்தை அனுப்பியுள்ளது. அதை ஆர்பிஐ அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. 

வந்தாச்சு Gpay, PhonePe-க்கு புதிய கட்டுப்பாடு..!! பயனர்கள் அதிர்ச்சி..!!

இதனால், இம்மாதம் முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு வரம்பிடப்படலாம் என்றும், இதனால், பயனர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கூகுள் பே, ஃபோன் பே போன்றவற்றைப் பயன்படுத்த முடியாது. தற்போதைய நிலவரப்படி PhonePe Google Pay, ​​Paytm போன்ற எந்த UPI அடிப்படையிலான செயலிகளிலும் பரிவர்த்தனை வரம்பு என்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இந்திய அஞ்சல் துறையில் 60,000 காலியிடங்கள்..? தீயாய் பரவும் செய்தி உண்மையா..?

Thu Dec 1 , 2022
இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட்மேன், மெயில் கார்டு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியானதாகவும், இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 60,000 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், டிசம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் செய்திகள் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறை மிகப்பெரிய ஊழியர்களை கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாகும். மொத்தமுள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களின் வாயிலாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் […]

You May Like