கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(29). இவருக்கும் சீர்காழியில் அடுத்துள்ள அரசூரை சேர்ந்த ரோஜா(25) என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல நேற்று இரவும் ரோஜாவும், சிலம்பரசனும் தகராறு செய்து கொண்டனர். இதில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் கொண்ட சிலம்பரசன் தன்னுடைய கையில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கணவர் சிலம்பரசன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
மேலும் இது பற்றி அறிந்து கொண்ட கிள்ளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருமணமான 2️ மாதத்தில் புதுமணப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.