விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூவர் கலாச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக, எக்கியர் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும் என்று மீனவ கிராம வாசிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்று திரண்டனர்.
அந்த கிராமத்தில் உள்ள பூமீஸ்வரர் ஆலயம் பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர் மல்க மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில், இந்த விவகாரம் குறித்து, மரக்காணம் காவல்துறை ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு காலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா உள்ளிட்டோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.