fbpx

நள்ளிரவில் போதையில் நடுரோட்டில் ரகளை செய்த 3 பெண்கள்…..! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை…..!

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் 3 பெண்கள் மதுவின் போதையில் சென்று கொண்டு இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கே காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சென்னை மாநகர பேருந்து ஒன்றை அந்த 3 பெண்களும் வழிமறித்து, அதற்கு அடியில் படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான காவல் துறையினர் பேருந்துக்கு அடியில் புகுந்து கொண்டிருந்த 3 பெண்களையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். ரகளையில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்துவதற்கு பெண் காவலர்கள் முயற்சி செய்தார்கள். ஆனாலும் போதை தலைக்கேறிய நிலையில், அந்த மூன்று பெண்களும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மறுபடியும் ரகளையில் ஈடுபடத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, பெண் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் அந்த 3 பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துப் போனார்கள் போதையை தெரிய வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த மூவரும் கண்ணகி நகர் பகுதியில் சேர்ந்த பெண்கள் எனவும், அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த திருமண விழா ஒன்றில் உணவு பரிமாறுவதற்காக வந்ததாகவும், வேலை முடிந்த கையுடன் மது அருந்திவிட்டு போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

சாலையில் மது அருந்தி ரகளை ஈடுபட்ட 3 பெண்கள் மீது திருவல்லிக்கேணி காவல் நிலைய காவல்துறையை சேர்ந்தவர்கள் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்

Next Post

தொடரும் பதற்றம்..!! மாநிலம் முழுவதும் இணைய சேவைகளுக்கு தடை..!! இனி எதுவும் இயங்காது..!!

Sun Mar 19 , 2023
பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக பிரிக்க ஒரு கும்பல் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்த அமைப்பை சார்ந்தவர்கள் காலிஸ்தான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போதே பஞ்சாப் பிரிவினையும் முன்வைக்கப்பட்டது. இந்தியாவில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட போதிலும், வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட சிலர் இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக பிப்.23ஆம் தேதி வாரிஸ் பஞ்சாட்டி ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து இந்த அமைப்பின் […]

You May Like