fbpx

சாட்ட விரோதமாக ட்ரோன்களை பறக்க விட்ட 3 இளைஞர்கள் அதிரடி கைது…..! சென்னை காவல்துறையினர் நடவடிக்கை…..!

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போன்ற நீதிமன்றங்கள் உள்ள பகுதிகளிலும் மற்றும் அரசு சார்ந்த முக்கிய கட்டடங்கள் இருக்கின்ற பகுதிகளிலும், பொது இடங்களிலும் தேவையில்லாமல் ட்ரோன்களை பறக்க விடக்கூடாது என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் வருகை நேற்று முன்தினம் கேமரா ஒன்று பறந்து வீடியோ கேமராவில் படம் எடுத்துக் கொண்டிருந்தது.

இந்த ட்ரோனை பறக்க விட்டதாக தெரிவித்து சென்னை மாநகர காவல் துறையினர் வித்யாசாகர்(27), விக்னேஸ்வரன்(30) சூர்யா(30) உள்ளிட்ட மூவரை அதிரடியாக கைது செய்தனர். அதன் பிறகு அவர்கள் மூவரும் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்கள்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த 3 இளைஞர்களிடம் கேட்டபோது ஒரு தனியார் நிறுவன விழாவுக்காக நாங்கள் ட்ரோன் கேமரா மூலமாக படம் பிடித்தோம் என்று அந்த 3 இளைஞர்களும் விளக்கமளித்திருக்கிறார்கள்.

Next Post

விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி.. எத்தனை கோடி நிதி ஒதுக்கீடு..? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..

Mon Mar 20 , 2023
தமிழக பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி நிதியும், நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 2006 முதல் 2011 வரை சராசரி 8 சதவீதமாக மாநிலத்தின் சொந்த வரிவருவாய், அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி […]
பாஜக அரசுக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? இலவசம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் கேள்வி..!

You May Like