fbpx

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் மே மாதம் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை…..! எதற்காக தெரியுமா…..?

தமிழகத்தில் பரமக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திருவிழாவின் சிறப்பாக வருகின்ற 5ம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குவார்.

அதனை கண்டு களிப்பதற்காக ஏராளமான வர்த்தகரிகள் அன்றைய தினம் பரமக்குடி வட்டத்திற்கு வருகை புரிவார்கள். ஆகவே பரமக்குடி வட்டத்திற்கு மட்டும் முழு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வரும் இருபதாம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு சார்நிலை கருவூலம் மற்றும் அரசு அலுவலகங்களும், அவசர அலுவலகங்கள் மற்றும் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

Next Post

அங்கன்வாடிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்…..! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!

Tue May 2 , 2023
தமிழகத்தில் அரசின் சார்பாக ஏராளமான அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. அதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளில் சேர்வதற்கு D, Ted படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல கலப்புத் திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை மிக விரைவில் நிரப்ப வேண்டும் என்று […]

You May Like