திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் முன்புறம் ஒரு அரிச்சந்திர பைரவர் கோவில் இருக்கிறது. இந்த கோவில் கதவு முன்பாக கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந வள்ளியம்மை மற்றும் செந்தமிழ் செல்வி உள்ளிட்டோர் விளக்கு கடை வைத்திருக்கிறார்கள். இதில் தடை வைப்பதில் உண்டான பிரச்சனையில் நேற்று மதியம் இரண்டு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பிரச்சனை குறித்து கீழ தேவதானம் மஞ்சுளா என்பவரின் மகன் அருண் பிரசாத் (33) என்பவருக்கும் சத்யராஜ் (32) என்பவரின் உறவினர் மணிமாறன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டார்கள். ராஜேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இது குறித்து அருண் பிரசாத் தன்னுடைய ராஜேந்திரனை தாக்கியதற்காக பழிவாங்கும் விதத்தில், மணிமாறனின் உறவினர் சத்யராஜின் தந்தை தனபால் (60) என்ற முதியவரை அறிவாளியுடன் சென்று தளவா ளின் கொண்டு அவருடைய மார்பில் வெட்டி இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தார் தற்சமயம் கொலை செய்த அருண்பிரசாத்தை கோட்டை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சம்பவ இடத்தில் திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் அன்பு மற்றும் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் செல்வி லட்சுமி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.