fbpx

6 வயது சிறுமியை சீரழித்த 55 வயது முதியவர்….! போக்சோ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…..!

சென்னை அண்ணா அண்ணா நகரை அடுத்துள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதான குமார் என்ற முதியவர் அதே பகுதியில் வசித்து வந்த ஆறு வயது சிறுமி ஒருவரிடம் தன்னுடைய வீட்டு மாடியில் பூனைகள் உள்ளதாக தெரிவித்து மாடிக்கு அழைத்துக்கொண்டு சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து கொண்ட அந்த சிறுமியின் தாயார், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைத் சட்டத்தின் படி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதியவர் குமார் கைது செய்யப்பட்டார்.

இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி எம். ராஜலட்சுமி இந்த வழக்கை விசாரித்தார். அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டிஜி கவிதா ஆஜராகி வாதம் செய்தார்.

அப்போது நீதிபதி வழங்கிய உத்தரவில் குமாருக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனையும், 30 ஆயிரம் மதிப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அத்துடன் அபராத தொகையை சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5️ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

Next Post

Key Chain-களில் இப்படி ஒரு ஆபத்து இருக்கா..? Track செய்யும் சிப்புகள்..!! மக்களே எச்சரிக்கை..!!

Wed Mar 22 , 2023
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு தரப்பில் மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இருப்பினும், மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் இலவசமாக கீ-செயின் விற்றுக்கொண்டே கிரிமினல்கள் உதவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Key Chain-களில்) Track செய்யும் […]

You May Like