fbpx

நடுரோட்டில் சரமரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட திமுக உறுப்பினர்.. திருத்தணியில் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஜெ.ஜெ. நகரில் வசித்து வருபவர் மோகன்.   இவர் திமுக உறுப்பினராக இருக்கிறார். மோகன் நேற்று இரவு 10 மணி அளவில் ஜெ.ஜெ.நகரில் இருக்கும் அவரது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது மூன்று பேர் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

இதில் அவர் முகம்,  உடலில் பல இடங்களில் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிக் அவரை பார்த்த அங்கிருந்த பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகன் உடலை  மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருத்தணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மோகனை சரமாரியாக வெட்டி கொன்றவர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். திருத்தணி, அரக்கோணம் சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

Whatsapp Update : இனி ஆன்லைனில் இருப்பதை மறைக்கலாம்.. எப்படி தெரியுமா..?

Tue Aug 9 , 2022
உலகின் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது 3 புதிய அம்சங்களைச் சேர்ப்பதாக WhatsApp அறிவித்துள்ளது. பயன்பாடு இப்போது ஒரு குழுவிலிருந்து அமைதியாக வெளியேற உங்களை அனுமதிக்கும், இது ஒரு பயனுள்ள அம்சமாகும், மேலும் நீங்கள் ஒரு பகுதியாக இருக்க விரும்பாத குடும்பம் அல்லது எரிச்சலூட்டும் குழுவிலிருந்து வெளியேற உதவும். வாட்ஸ்அப், ஒரு […]

You May Like