fbpx

மகனுக்காக உயிரை விட்ட தந்தை.. கேரளாவில் நடந்த பயங்கரம்.. வாலிபர்கள் வெறிச்செயல்..!

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலங்காடு பகுதியில் வாழ்ந்து வருபவர் விமல் (54). இவரது மகன் ரோகித் (22). சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் ரோகித் தனது வீட்டின் அருகே நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் பைக்கில் அந்த வழியாக வந்தனர்.

அவர்கள் இருவரும் ரோகித் வீட்டின் அருகில் வந்த போது தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதை பார்த்த ரோகித் அவர்களை காப்பாற்றுவதற்காக சென்றார்.
குடிபோதையில் இருந்த அவர்கள் ரோகித்தை தாக்கினர். இதை பார்த்த தந்தை விமல் ஓடிவந்து மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது போதையில் இருந்த இரண்டு வாலிபர்களும் தந்தை விமலை பயங்கரமாக தாக்கினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விமலை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் விமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பியோடி வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

கழுத்தை அறுத்து கொலை.. தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவி சென்ற மர்ம நபர்கள்..!

Sun Aug 21 , 2022
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கும் மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார்(58). இவர் முத்தாண்டிக்குப்பம் வல்லம் கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அஞ்சலை தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், மகள்ளும் உள்ளனர். நேற்று இரவு திலீப்குமார், இயற்கை உபாதை கழித்து விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். பிறகு நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் […]

You May Like