fbpx

பள்ளி இறைவணக்கத்தில் பங்கேற்ற நான்காம் வகுப்பு மாணவி; மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

அரியானா மாநிலம் குருகிராம் நகரின் செக்டார் 64 பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த தனியார் பள்ளியில் இன்று காலை 8.30 மணிக்கு காலை இறைவணக்கம் நடைபெற்றது. இறைவணக்கம் முடிந்தவுடன் அந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி வகுப்பறைக்கு சென்றுள்ளார்.

வகுப்பறைக்கு செல்லும் வழியில் அந்த சிறுமி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதை கண்ட சக மாணவ, மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களிடம் கூறினர். இதை தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை ஆசிரியர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

#Exam Results: மாணவர்களே துணை தேர்வு முடிவுகள் இன்று மாலை 3-க்கு வெளியீடு...! எப்படி தெரிந்து கொள்வது...? முழு விவரம்...

Tue Aug 23 , 2022
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமாவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணை தேர்வு முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.im என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை […]

You May Like