fbpx

பள்ளிக்குச் சென்ற மாணவி பைக்குள் அடைத்து சடலமாக கண்டெடுப்பு… பகீர் சம்பவம்..!

மகாராஷ்டிரா, பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம் அருகே மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகே பை ஒன்று கிடந்தது. அந்த வழியே சென்ற ஒருவர் அந்த பையை பார்த்து சந்தேகமடைந்து, இதுகுறித்து வாலிவ் பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பையை பிரித்து பார்த்தபோது, அந்த பைக்குள் மாணவி ஒருவரது உடல் இருந்தது. பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. இதை தொடர்ந்து, வசாய் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக பெண்ணின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

15 வயதுடைய அந்த சிறுமி மும்பையின் அந்தேரி பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். காலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வராததால் கலக்கமடைந்த, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சிறுமியின் உடல் கிடைத்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

மாணவியை கடத்தி ஆட்டோ டிரைவர் கைவரிசை; பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. கைது செய்த போலீசார்..!

Sat Aug 27 , 2022
சென்னை பட்டாபிராம் பாரதியார் நகர் அரசு பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியின் பெற்றோர்களுக்கு இடையே நடந்த பிரச்சனையால் மனவுளச்சலில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து தனியாக புறப்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் சிறுமையிடம் பேசி, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றியுள்ளார். மேலும் அங்கிருந்து பட்டாபிராம் அருகே உள்ள வெள்ளவேட்டில் இருக்கும் தனியார் வாட்டர் கம்பெனி பின்புறம் அழைத்துச் […]

You May Like