fbpx

இரவு நேரத்தில் தனியாக ஆட்டோவில் சென்ற பெண்… ஓட்டுனரால் நேர்ந்த விபரீதம்..!

கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண், கோவை செல்வபுரத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி இருக்கிறார். அவர், கடந்த பத்து மாதமாக கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண், கடந்த 28-ஆம் தேதி திருப்பூருக்கு சென்றார். அங்கு தனது வேலை முடிந்த பின்னர் பேருந்தில் புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணியளவில் கோவை ஹோப்காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்பு செல்வபுரம் செல்வதற்காக ஆன்லைன் மூலம் ஆட்டோ முன்பதிவு செய்தார்.

அவர் முன்பதிவு செய்த ஆட்டோ வந்தவுடன், அந்த பெண் ஏறியதும் அவினாசி சாலையில் ஆட்டோ சென்று கொண்டு இருந்தபோது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோ டிரைவர் திடீரென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். ஆனாலும் டிரைவர், ஆட்டோவை நிறுத்தாமல் சென்றுள்ளார். அதனால் பீளமேட்டில் இருக்கும் ஒரு வணிக வளாகம் அருகே சென்றுகொண்டிருந்த போது அந்த பெண் திடீரென்று ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். இதனால் அந்த பெண்ணுக்கு உடலில் பல இடங்களில் அடிபட்டது.

இதை தொடர்ந்து அந்த பெண் செல்போன் மூலம் நண்பர்களுக்கு தகவல் அளித்தார். உடனே அவருடைய நண்பர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் பீளமேடு காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவில் ஆட்டோவில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கோவை உக்கடம் அருள்நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சாதிக் (43) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் போன்ற மூன்று பிரிவின் கீழ் முகமதுசாதிக் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த டிரைவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

”விராட் கோலியின் மோசமான ஷாட்கள்”..! வீரேந்திர சேவாக் பரபரப்பு கருத்து..!

Wed Aug 31 , 2022
”இதுபோன்ற மோசமான ஷாட்களை ஒருபோதும் விராட் கோலி விளையாடியதில்லை” என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிகொண்ட போட்டி கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. இறுதியில் 3 ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அபாரமாக விளையாடினர். இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில், ஹர்திக் […]

You May Like