fbpx

பேனா சின்னத்திற்கு விதிக்கப்பட்ட அதிரடி நிபந்தனைகள்…..! மத்திய அரசு நடவடிக்கை……!

திமுகவின் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டின் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆனால் அவருடைய இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். ஆனாலும் அதை இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு உறுதியுடன் இருந்தது. இந்த நிலையில் மெரினாவில் கடலுக்கு நடுவே பேனாச்சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு தற்போது தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

முன்னதாக கடலில் பேனா சிலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது. தற்சமயம் இதற்கு சில நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஐ எஸ் என் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், கட்டுமானத்திற்கு எந்த விதமான சூழ்நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது, திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

Next Post

இனி ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டால் அவ்வளவுதான்…..! ரேஷன் கடை பணியாளர்களை எச்சரித்த கூட்டுறவு சங்க பதிவாளர்…..!

Sat Apr 29 , 2023
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவான விலையில் கோதுமை, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மலிவான விலையில் மன்னனையும் வழங்கப்பட்டு வருகிறது அதோடு அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே ஏழை, எளிய மக்கள் இதன் மூலமாக வெகுவாக பயனடைந்து வருகிறார்கள். இத்தகைய […]

You May Like