fbpx

டமால் திடீரென்று உடைந்தது அதிமுக பாஜக கூட்டணி….! தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு….!

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முணைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டசபை தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில் பெங்களூர் அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுகவின் அவை தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் நான்கு இடங்களை கேட்டு அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் அதற்கு பாஜக தரப்பில் இசைவு அளிக்கப்படாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த திடீர் முடிவை அறிவித்துள்ளார். அதாவது புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து அதிமுக களமிறங்குகிறது. ஆகவே கர்நாடக மாநிலத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் கர்நாடகாவின் நிலை எதிரொலிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

திடீரென ஏற்பட்ட உடல்நல பாதிப்பு…..! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அண்டை நாட்டு அதிபர்…..!

Wed Apr 19 , 2023
கடந்த மாதம் நம்முடைய அண்டை நாடான நேபாளத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த நாட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆகவே நேபாள நாட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராம் சந்திர பௌதர் அந்த நாட்டின் அதிபராக சென்ற மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார் இத்தகைய சூழ்நிலையில் திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக, சென்ற திங்கள் கிழமை திரிபுவனம் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். […]

You May Like