fbpx

தலைமறைவாக இருந்த குமரி பாதிரியார் அதிரடி கைது….! காவல்துறையினரின் அதிரடி….!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்ட்ரோ (29) கிறிஸ்துவ பாதிரியாரான இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்கரையில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் தேவாலயத்திற்கு வருகை தரும் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கினர்.

மாணவி ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் வழங்கியிருந்தார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அந்த பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துற ையினர் செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், பாதிரியாரின் மடிக்கணினியை கைப்பற்றிய காவல் துறையினர் அதை ஆய்வு செய்த போது ஆபாச வீடியோக்கள் மற்றும் பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தனர். இவற்றில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டிருந்தனர். அவற்றை கைப்பற்றும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் பாதிரியாரை கைது செய்ய காவல்துறை தரப்பில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், அந்த பாதிரியார் நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை முதல் அவருடைய கைபேசி சிக்னலை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அவர் நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் உள்ள வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பாதிரியாரை கைது செய்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருக்கின்ற சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்பான விபரமும் அவரிடமிருந்து பெறப்பட்டது. பின்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Post

ஐசியு வில் மயக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்! திடுக்கிடும் கொடூர சம்பவம்!

Tue Mar 21 , 2023
கேரளாவில் அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்திலிருந்த பெண்ணை மருத்துவமனை ஊழியரே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவக் கல்லூரியின் நிர்வாகத்திற்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சார்ந்த பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பால் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த […]

You May Like