மும்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருந்த 61 வயது முதியவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறினர். மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இறந்தவர் தனது காதலன் என்று அவருடன் இருந்த 40 வயது பெண் கூறியுள்ளார். புறநகர் குர்லாவில் இருக்கும் ஹோட்டலுக்கு அந்தப் பெண்ணுடன் காலை 10 மணி அளவில் முதியவர் சென்றார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் ஹோட்டலின் வரவேற்பறையைத் தொடர்புகொண்டு, முதியவர் மயங்கி விழுந்துவிட்டதாக தெரிவித்தார்.
ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் முதியவரை சியோனில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் முன்பே இறந்துவிட்டதாக சொன்னதாக குர்லா காவல் நிலைய அதிகாரி கூறினார். அதன் பிறகு அந்த பெண்ணை குர்லா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அந்த நபர் வொர்லியில் வசிப்பவர் என்றும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் என்றும் அந்த பெண் காவல்துறையினரிடம் கூறினார்.
உடலுறவின் போது, அவர் மது அருந்தினார். ஆதனால் அவர் மயங்கி விழுந்தார் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் விபத்து இறப்பு என்று அறிக்கை பதிவு செய்து இருக்கிறோம். மேலும் மரணத்திற்கான சரியான காரணத்தை தெரிந்து கொள்ளவும், செயலுக்கு முன் அவர் ஏதேனும் மாத்திரையை சாப்பிட்டாரா, என்பதைக் கண்டறியவும் அவரது மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.