fbpx

திருவிழாவில், ஒலிபெருக்கியில் சத்தத்தை குறைக்க சொன்னதால்… துடிக்க துடிக்க வெட்டி கொலை..!

சென்னை, நாகல்கேணி காந்தி நகரில் வசிப்பவர் நாகு என்கிற ஞானசம்பந்தன் (46). அவரது சகோதரர் சரவணன் (56). இருவரும் சாலையோரம் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர். நேற்று இரவு, நாகல்கேணி, அண்ணா தெருவில் இருக்கும் காலி இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், அவர்களிடம் தகராறு செய்தது. பின், சகோதரர்கள் இருவரையும், அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில், படுகாயமடைந்த ஞானசம்பந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஞானசம்பந்தன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சரவணனை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பம்மல், பூம்புகார் நகரில், கடந்த மூன்றாம் தேதி, விநாயகர் சிலை வைத்திருந்த இடத்தில் ரேடியோவில் அதிக சத்தமாக உள்ளதாக கூறி, ஞானசம்பந்தன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் விழா நடத்தியவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கும் ராஜேஷ்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ராஜேஷிடம், ஜாக்கிரதையாக இரு, இல்லை என்றால் கொன்று விடுவோம் என ஞானசம்பந்தன் மற்றும் சரவணன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன ராஜேஷ்குமார் முந்திக்கொண்டு, நேற்று இரவு, நண்பர்கள் 6 பேருடன் சென்று, இருவரையும் வெட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக, சங்கர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பம்மல், பூம்புகார் நகரை சேர்ந்த லாரி ஓட்டுனரான ராஜேஷ்குமார் (34) உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.

Baskar

Next Post

சகோதரனின் மரண செய்தியை கேட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சகோதரி..! சோகத்தில் கிராம மக்கள்..!

Wed Sep 7 , 2022
தன் சகோதரனும் அவரது நண்பரும் விபத்தில் பலியான தகவலை கேட்டு அடுத்த சில மணி நேரத்திற்குள் சகோதரி தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜகுரு மற்றும் தனியார் பேருந்து நடத்துநர் ராமு என்கிற ராமநாதன். ராமுவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில், நண்பர்களான இருவரும் நாகுடியிலிருந்து ஒரு மோட்டார் […]
பெண்ணின் உயிரை பறித்த பைக் ரேஸ்..!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த சோகம்..!!

You May Like