fbpx

15 வயது சிறுமியை கணவருடன் வாழ அனுமதித்த நீதிமன்றம்; வயதுக்கு வந்த சிறுமி திருமணம் செய்ய… பெற்றோர் அனுமதி தேவையில்லை..!

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அவரது பெற்றோரை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் அதே மதத்தை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமிய மத முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் அந்த இளைஞரும், சிறுமியும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் பெற்றோர் மகளை திருமணம் செய்துகொண்ட இளைஞர் மீது புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து ஏப்ரல் மாதம் காவல்துறையினர் இளைஞரை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அந்த சிறுமியை இளைஞரிடமிருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது சிறுமி பாலியல் ரீதியில் உறவு கொண்டிருந்ததும், கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. சிறுமி 2006-ஆம் வருடம் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு தற்போது 15 வயது ஐந்து மாதம் ஆகுகிறது. இதனிடையே, பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்துகின்றனர், மேலும் சொந்த விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டேன், இதனால் கணவருடன் என்னை சேர்த்து வைத்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிறுமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கணவரையும், தன்னையும் பிரிக்கக்கூடாது என்று சிறுமி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜஸ்மீட் சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 15 வயதான சிறுமி அவரது கணவருடன் வாழ நீதிபதி அனுமதித்தார். மேலும், சிறுமிக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இஸ்லாமிய மதத்தின் முகமதியன் சட்டத்தின்படி, வயதுக்கு வந்த சிறுமி (இஸ்லாமிய மத சிறுமி) பெற்றோரின் அனுமதி இன்றி திருமணம் செய்துகொள்ளலாம். மேலும், சிறுமிக்கு 18 வயது முடியவில்லை என்றாலும் அவர் தனது கணவருடன் சேர்ந்து வாழலாம் என நீதிபதி தெரிவித்தார்.

சிறுமியின் கணவர் மீது போடப்பட்ட போக்சோ சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என தெரிவித்த நீதிபதி, காதலித்து இஸ்லாமிய சட்டத்தின்படி திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு உடல் ரீதியிலான உறவு கொண்டுள்ளனர். எனவே, இது பாலியல் தொல்லை வழக்கின் கீழ் வராது என தெரிவித்தார். மேலும் நீதிபதி, சிறுமியும் அவரது கணவரும் சேர்ந்து வாழ அனுமதித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார். 15 வயது சிறுமியின் திருமணம் செல்லும் என கூறி சிறுமியை அவரது கணவருடன் வாழ அனுமதித்து டெல்லி நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2-வது முறையாக மீண்டும் வந்த சோதனை..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

Wed Aug 24 , 2022
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரபல பாலிவுட் அமிதாப் பச்சன் நேற்றிரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், எனக்கு கோவிட் பாசிடிவ் ரிசல்ட் வந்தது. அதனால், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் தற்போது […]

You May Like