கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் தொடங்கிய நோய் தொற்று பரபல் அதன் பிறகு உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.
இந்த நோய் தொற்று பரவல் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் நோய் தொற்று பரவல் குறைந்து இருந்தாலும் இன்றளவும் இந்த நோய் தொற்று பரவலின் அச்சம் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில், ஹரியானா மாநிலத்தில் குருகிராமில் இருக்கின்ற மாருதி கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுஜன் மஜி கடந்த 2020 ஆம் வருடம் நோய் தொற்று பரவிக் கொண்டிருந்த சமயத்தில் இவருடைய மனைவி முன்முன் தன்னுடைய 10 வயது மகனுடன் வீட்டுக்குள் முடங்கினார்.
வரும்போது நோய் தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் முன் முன் தானும் வெளியே வரவில்லை, தன்னுடைய மகனையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதோடு வேலைக்கு சென்று வரும் கணவர் சுஜனை கூட வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை. ஆகவே அவர் வீட்டிற்கு அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.
மனைவி மற்றும் மகனுடன் வீடியோ கால் மூலமாக சுஜன் பேசி கொண்டு இருக்கிறார். மனைவி மற்றும் மகனுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சுஜன் வாங்கி வீட்டின் கதவருகே வைத்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. நோய் தொற்று அபாயம் குறைந்துவிட்டது என்று அறிவுறுத்தியபோதும் கூட முன்முன் வீட்டை விட்டு வெளியே வர மறுத்து விட்டார். அதோடு மகனுடன் 3 வருடங்களாக ஒரே வீட்டிற்குள் முடங்கி இருந்திருக்கிறார்.
வேறு வழி இல்லாமல் சுஜன் காவல்துறையிடம் புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினரும் சுகாதாரதுறையை சார்ந்தவர்களும் செவ்வாய்க்கிழமை சுஜன் வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று சுஜனின் மனைவி மற்றும் மகனை மீட்டு வெளியே அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் தான் முன்முன் தங்களை வெளியே அழைத்துச் சென்றால் குழந்தையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக காவல் துறையினர் கூறுகிறார்கள். வீட்டை பார்வையிட்ட குழந்தைகள் நலக்குழுவை சார்ந்தவர்கள் 3️ வருடங்களாக சேர்ந்த குப்பைகள் அறை முழுவதும் விரைந்து கிடந்ததை பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.