fbpx

பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியே சந்திக்க காத்திருக்கும் இ.பி.எஸ் ஓ. பி. எஸ்…..! நேரம் கிடைக்குமா….?

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகின்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைக்க உள்ளதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், பிரதமரின் சென்னை வருகையின் போது அவரை தனித்தனியாக சந்திப்பதற்கு எதிர் கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் நேரம் கேட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதிமுகவின் பொது செயலாளர் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு முதல் முறையாக நேரம் கேட்டிருக்கிறார். இந்த சங்கத்தின் போது அவர் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதே போன்று அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நேரம் கட்டப்பட்டு அதோடு சட்டப் போராட்டம் நடத்தி வரும் பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் என்ற விவகாரம் இந்த இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் தற்போது வரையில் இருவருக்குமே பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் ஒரு சில நிமிடங்கள் இருவரும் தனித்தனியே சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

Next Post

இனி பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...

Fri Apr 7 , 2023
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 6000-ஐ தாண்டியது… ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா […]

You May Like