இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஒன்றாகும். ஷபான் மாதத்தின் 30-ஆம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக வைத்து, ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயுப் அறிவித்தார்.
ரமலான் நோன்பின்போது சஹர் என்று சொல்லப்படும் காலை உணவை 4️ மணிக்கு சாப்பிட்டுவிட்டு சூரியன் உதயமான பிறகு நோன்பு இருப்பார்கள் நாள் முழுவதும் தண்ணீர் உணவு உதித்தவை அருந்தாமல் சூரியன் மறைந்த பின்னர் நோன்பை முடித்துக் கொள்வார்கள். நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும், மாலை சமயங்களில் நோன்பு கஞ்சியும் வழங்கப்படுவது வழக்கம்.
புதுக்கோட்டை,விராலிலை, கந்தர்வகோட்டை, திருமயம், அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொழுகையுடன் ஆரம்பித்தினர். தஞ்சை சாந்தி நகர் பகுதியில் இருக்கின்ற பள்ளிவாசலில் இக்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் பங்கேற்றுக் கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு நோன்பு திறந்தனர்.