fbpx

ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று என வரும் மகளிருக்கான இலவச பஸ்.. பாஜக தலைவர் அண்ணாமலை சாடல்..!

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அர்ஜூனமூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். இந்நிலையில் அவரை கட்சியில் அடிப்படை உறுப்பினராக்கி கட்சி அடையாள அட்டையை பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

இதைதொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மக்களிடம் கருத்து கேட்போம் என்று சொல்லி நாடகம் நடத்தி வருகின்றனர். வசூல் வேட்டைகாகவே மாநில அரசு மின் கட்டண உயர்வு குறித்து, மக்களிடம் கருத்து கேட்போம் என்று நாடகம் நடத்துகின்றனர். கருத்து கேட்போம் என்ற நாடகத்தை நிறுத்தி விட்டு அவர்கள் ஏற்றிய மின்சார கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் கிட்டத்தட 30 தற்கொலைகள் நடந்துள்ளன. எனவே ஆன்லைன் ரம்மிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மாநில அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் தமிழக பாஜக அவர்களுடன் இருப்போம். கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவை இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு கொடுத்த வீடு, கேஸ் அடுப்பு போன்றவை இலவசங்கள் கிடையாது. அது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாகும். திமுக இலவசம் தருகிறோம் என்ற திட்டங்கள், வெறும் திட்டங்களாக தான் இருக்கிறது. பாஜக வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவோம். மேலும் மகளிருக்கு இலவசம் என்று கூறிய பஸ் எப்போது வருகிறது என்றே தெரிய வில்லை. ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று என வருகிறது. அதிமுக இலவச திட்டங்கள் அறிவித்தால் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, அடுத்த தேர்தல் வரட்டும், அதிமுக இலவச திட்டங்கள் அறிவித்தால், மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களாக உள்ளதா என்று பார்ப்போம். அதன் பின் அதை பற்றி பேசலாம். இப்போது பேச கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Baskar

Next Post

’இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாதீங்க’..! தமிழக அரசை கேட்டுக்கொண்ட அன்புமணி..!

Mon Aug 22 , 2022
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை வரவேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள அவர், […]
’இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாதீங்க’..! தமிழக அரசை கேட்டுக்கொண்ட அன்புமணி..!

You May Like