தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவில் வருகிறது ஆகவே தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கனமழையும், 14 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு, கோவையில் ஒரு சில பகுதிகளிலும், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் போன்ற பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.