fbpx

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை….! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மாலை 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன் அடிப்படையில், பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

Next Post

இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு Cash on Delivery கிடையாது..? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Fri May 5 , 2023
இந்தியாவில் பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் பலரும் ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங்கை முடித்து விடுகின்றனர். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும்போது பல சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும், ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது பணம் செலுத்துவதற்கு பல வழிகள் உள்ளன. அதில், மக்கள் கேஷ் ஆன் டெலிவரி (Cash on Delivery) ஆப்ஷனை விரும்புகின்றனர். ஒருசிலர் அப்பொழுதே வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை செலுத்திவிடுகின்றனர். மேலும், சிலர் […]
இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு Cash on Delivery கிடையாது..? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

You May Like