fbpx

தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெளுத்து வாங்கிய வெயில்……!

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே சித்திரை மாதம் பிறந்த நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த விதத்தில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 16 மாவட்டங்களில் 100 டிகிரி பாரான்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோடு மதுரை விமான நிலையம் போன்ற பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. வேலூர் திருச்சி கரூர் போன்ற மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.

அதேபோல சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், சேலம் மற்றும் திருத்தணி போன்ற பகுதிகளில் 103 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. அதோடு கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருப்பத்தூர் போன்ற பகுதிகளிலும் 101 டிகிரி பாரான்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. புதுவையில் முதல் முறையாக நேற்று 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

Next Post

தினசரி பயன்படுத்தும் டூத் பேஸ்டை வைத்து இவ்வளவு விஷயம் செய்யலாமா..? இனி பணம் மிச்சமாகும்..!!

Fri Apr 21 , 2023
காலை கடனில் முதலில் நாம் துவங்குவது பேஸ்டுடன்தான். பல் துலக்கிய பின்புதான் எதையும் செய்ய வேண்டும் என்பதே சுகாதாரப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது. அதனால்தான் காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..? — பற்பசையை சிறிது தண்ணீரில் கலந்து, நகைகளை பளபளக்க செய்யலாம். இந்த கரைசலை உங்கள் தங்க நகைகளில் தடவி, மென்மையான […]

You May Like