fbpx

அரசியலில் குதிக்கிறார் லெஜெண்ட் சரவணன்? வெளியான அப்டேட்டால் பரபரப்பு!

சரவணா செல்வரத்தினம் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தான் சரவணன்.பொதுவாக இது போன்ற ஜவுளி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்த ஜவுளி நிறுவனங்களின் விளம்பரத்திற்காக பல பிரபலங்களின் உதவியை நாடி, அவர்கள் மூலமாக தங்களுடைய நிறுவனங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த விரும்புவார்கள்.

ஆனால் அப்படி பிரபலங்களின் உதவியை நாடினால் கடை உரிமையாளருக்கு நிச்சயம் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.இதையெல்லாம் நன்றாக உணர்ந்து கொண்ட தொழிலதிபர்தான் சரவணன்.

அதன் காரணமாகவே தன்னுடைய ஜவுளி நிறுவனங்களின் விளம்பரங்களில் வெளியே சென்று பிரபலங்களை தேடாமல் தானே தன்னுடைய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து தன்னுடைய நிறுவனத்தை பிரபலப்படுத்த தொடங்கினார்.அதன் பலனாக மக்கள் மத்தியில் இவர் நிறுவனங்கள் மட்டும் பிரபலமாகவில்லை, இவரும் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில் தான் இவருடைய நடிப்பில் உருவாக்கப்பட்ட லெஜன்ட் திரைப்படம் வெளியாகி பலதரப்பட்ட விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படத்தில் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்த இவர், ரசிகர்களின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்தார்.

தன்னுடைய லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கான விளம்பரங்களில் நடித்து அதன் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்த சரவணன், தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலமாக நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

தி லெஜன்ட் திரைப்படத்தில் சரவணனுடன் ஊர்வசி, ரவுத்தலா பிரபு, நாசர், விவேக், யோகிபாபு போன்ற நடித்திருக்கின்றன. ஜேடி ஜெர்ரி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகி படத்திற்கு நல்ல விளம்பரத்தை தேடி கொடுத்தனர்.

இந்த நிலையில் தான் சரவணன் தற்சமயம் தன்னுடைய அடுத்த படத்திற்கு தன்னை தயார் படுத்தி வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நல்ல கதையம்சம் இருக்கின்ற திரைப்படங்களில் தான் தொடர்ச்சியாக நடிக்க விரும்புவதாக அவர் முன்பு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கோவையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், தன்னுடைய அடுத்த திரைப்படம் தொடர்பாக மிக விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். அத்துடன் தான் அரசியலுக்கு வருவது மக்கள் மற்றும் மகேசனின் கையில் தான் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Next Post

#தூத்துக்குடி: மனைவி மீது சந்தேகபட்டு அடித்து கொலை செய்த கணவர்..!

Tue Dec 13 , 2022
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள திருமாஞ்சி நகரில் இமானுவேல் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாய் எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.  இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இமானுவேல் தனது மனைவி கன்னித்தாய்க்கு வேறொரு ஆண் நபருடன் தொடர்பு உள்ளதாக கூறி சந்தேகப்பட்டுள்ளார்.  இதன் காரணமாக பல முறை மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இத‌னிடையே நேற்றைய தினத்தில் […]

You May Like