டாஸ்மாக் மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் உள்ளிட்ட தினங்களில் தமிழ்நாடு முழுவதும் மூடப்படுவது வழக்கம். அந்த விதத்தில், மே தினத்தை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.
இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிடுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசும் அரசு சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிடும்.
அந்த வகையில், தலைநகர் சென்னையில் மே மாதம் 1ம் தேதி அனைத்து டாஸ்மாக் மற்றும் அனைத்து மதுபான கூடங்களும் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதை மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறார். அதேபோல திருவண்ணாமலையிலும் அனைத்து டாஸ்மாக்குகளும் மற்றும் பார்களும் மூடப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார்.