கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தன்னை சந்திக்க வருபவர்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் பூங்கொத்து, சால்வைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ள வலைதள பதிவில், இனி தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளின் போது மரியாதை நிமித்தமாக எனக்கு வழங்கும் பூங்கொத்து அல்லது சால்வைகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதேபோல என் மீது அன்பும், மரியாதையும் செலுத்த நினைப்பவர்கள் எனக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குங்கள், உங்கள் அன்பும், பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.