தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், வங்க கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும் என்றும் அது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, இன்று முதல் வரும் 10ம் தேதி வரையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசலாம் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஏற்படும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக உருமாறும். ஆகவே பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.